பெண் சிறை கைதிகள் பாலியல் பலாத்காரம்.. 100க்கும் மேற்பட்ட பெண்கள் உயிருடன் எரிக்கப்பட்டது.

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் கிளர்ச்சியாளர்களுக்கும், அரசுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் இருந்து வருகிறது. கிளர்ச்சியில் ஈடுபடுபவர்களை, பல்வேறு கொடுமைகள் செய்து சுட்டுக் கொல்லப்படுகின்றன. சரண் அடைந்தவர்களை அடைத்து தண்டனை கொடுத்து வருகிறது அரசு. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 27 ஆம் தேதி எம் 23 என்ற கிளர்ச்சி குழுவினர் கோமா என்ற நகரத்தை கைப்பற்றினர். அப்போது அங்கிருந்த மிகப்பெரிய சிறை உடைக்கப்பட்டது. சிறையில் இருந்த ஆயிரக்கணக்கான கைதிகள் தப்பி செல்ல தொடங்கினர். அந்த நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண் சிறை கைதிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதும் அல்லாமல் 150 க்கு மேற்பட்ட பெண்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டு ஆண் கைதிகள் சிறையை தீயிட்டு கொளுத்தியதில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் உயிருடன் தீயில் கருகி உள்ளனர்.
