தமிழகம்
ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையத்தில் அதிர்ச்சி சம்பவம்: பெட்ரோல் குண்டு வீச்சு

ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையம் மீது நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் அரங்கேறியுள்ளது. இருசக்கர வாகனத்தில் வந்த முகமூடி அணிந்த இரு நபர்கள் காவல் நிலையத்தின் மீது இரண்டு பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பியோடியுள்ளனர்.
காவல் நிலையத்தின் இரும்புக் கதவு பூட்டப்பட்டிருந்த நிலையில், அதன் மீதே பெட்ரோல் குண்டுகள் விழுந்துள்ளன. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும், ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நேரடி ஆய்வு மேற்கொண்டார்.
காவல்துறையினர் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த தாக்குதலில் முன்னாள் குற்றவாளிகள் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், பத்துக்கும் மேற்பட்டவர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.