சச்சினுக்கு யுவராஜ் சிங் வாழ்த்து

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு, இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மும்பையில் நேற்று முன்தினம் நடைபெற்ற பிசிசிஐ-யின் வருடாந்திர விருது வழங்கும் விழாவில் சச்சின் டெண்டுல்கருக்கு கர்னல் சி.கே. நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவம் செய்யப்பட்டது.
கனவுகள் நனவாகும்: இந்நிலையில் சி.கே.நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற சச்சினுக்கு, யுவராஜ் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “சி.கே. நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருதை வென்றதற்கு வாழ்த்துகள் மாஸ்டர் சச்சின். எங்கள் தலைமுறையின் ஒவ்வொரு கிரிக்கெட் வீரருக்கும், இடைவிடாத கடின உழைப்பு மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கையுடன் கனவுகள் நனவாகும் என்பதை எங்களுக்குக் காட்டியவர் நீங்கள்தான்” என்று கூறியுள்ளார்.